நாகர்கோவில், மார்ச் 2 –
குளச்சல் அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் அஜின் (29). கபடி வீரர். இவர் சென்னையில் உள்ள தனது நம்பரை பார்ப்பதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார். இவருடன் வேறு சில நண்பர்களும் உடன் சென்றனர். இவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தனர்.
ரயில் சென்ற போது திடீரென வாசலில் நின்று கொண்டு இருந்த அஜின் தவறி கீழே விழுந்தார். ரயில் வேகமாக சென்று கொண்டிருந்ததால் உடன் இருந்தவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு இடையே ரயில் திருநெல்வேலி சென்றதும் அங்குள்ள போலீசாட்டம் கூறினார்கள். வள்ளியூர் கடந்து வரும்போது விழுந்தார் என்பதால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு தகவல் வந்ததும் நாகர்கோவில் போலீசார் வள்ளியூர் முதல் நாங்குநேரி சுற்றுவட்ட தண்டவாளத்தில் தேடினர். இதேபோல திருநெல்வேலி ரயில்வே போலீசார் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் நோக்கி தேடி வந்தனர்.
இதற்கிடையில் வள்ளியூர் அடுத்த தளபதி சமுத்திரம் என்ற இடத்தில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அஜின் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரவு 7 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை தேடிய பின் அஜின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


