நாகர்கோவில், ஜனவரி 31 –
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய அஞ்சல் துறை, உலக அஞ்சல் சங்கம் (UPU) நடத்தும் 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடித எழுதும் போட்டியின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 9 முதல் 15 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
போட்டியின் தலைப்பு:
“மின்னணு உலகில் மனித தொடர்பின் முக்கியத்துவம் குறித்து நண்பருக்கு ஒரு கடிதம் எழுதுக”.
இக்கடிதமானது ஆங்கிலம் அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள மொழியில் எழுதப்பட வேண்டும். வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
மாநில அளவில்:
முதலாம் பரிசு ₹25,000, இரண்டாம் பரிசு ₹10,000, மூன்றாம் பரிசு ₹5,000.
தேசிய அளவில்:
முதலாம் பரிசு ₹50,000, இரண்டாம் பரிசு ₹25,000, மூன்றாம் பரிசு ₹10,000.
உலக அளவில்:
முதலாம் பரிசு: தங்கப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு, இரண்டாம் பரிசு: வெள்ளிப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு, மூன்றாம் பரிசு: செம்புப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு
பங்கேற்பதற்கான நடைமுறை:
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வயது ஆதாரம் மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் கடிதத்தையும், விண்ணப்பத்தையும் தங்கள் பள்ளி வழியாக 15.03.2026 ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலுவலக
அலைபேசி 9442604383, 9080820107, 9894774410 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.



