நாகர்கோவில் ஜூன் 26
லஞ்ச பணத்திற்கு ஆசைப்பட்டு தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட போலீசார்.
உரிய அனுமதி சீட்டு இல்லாமல் அதிக பாரத்துடன் எம்சென்ட் கொண்டு செல்ல லஞ்சம் பெற்று அனுமதித்து பணியில் நேர்மை தவறிய போலீசார் 10 பேரில் 7 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம். 1 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில் முக்கியமாக காவலர்கள் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
உரிய அனுமதி சீட்டு இல்லாமல் அதிக பாரத்துடன் எம்சென்ட் கொண்டு செல்ல லஞ்சம் பெற்று அனுமதித்து பணியில் நேர்மை தவறிய ஹைவே பெட்ரோல் மற்றும் காவல் நிலைய போலீசார் மீது தற்போது எஸ்.பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள வாகனங்கள் விவகாரத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் கூறப்படும் போலீசாரை அதிரடியாக எஸ்.பி மாற்றியுள்ளதாகவும் மார்த்தாண்டம் காவல் நிலையம், களியக்காவிளை காவல் நிலையம் மற்றும் புதுக்கடை காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்த போலீசார் மற்றும் ஹைவே பெட்ரோல் வாகனத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் ஏழு பேர் ஆயுதப்படைக்கும் மேலும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் . தவறு செய்யும் போலீசார் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கு மாவட்ட எஸ்.பி முன்னுரிமை கொடுத்து வருவது அவரது செயல்பாட்டின் மூலம் தெரிய வருகிறது. வரும் நாட்களிலும் இது போன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது. எஸ்.பி யின் இந்த அதிரடி நடவடிக்கையால் தவறு செய்யும் போலீசார் மத்தியில் கலக்கமும் நடுக்கமும் ஏற்பட்டுள்ளது.