ஈரோடு, செப். 2 –
ஈரோடு கதிரம்பட்டியில் சூர்யா இன்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 18 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கான வரவேற்று விழா கல்லூரி தலைவர் ஆண்டவர் ராமசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மனோகரன் வரவேற்றார்.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஈரோட்டின் பூகம்பம் பெரியார் தான். அவர் அனைவரையும் முக்கியமாக பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயர் கல்வி படிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறார். இதனால் தமிழ்நாடு உயர்கல்வியில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 6 மாதத்தில் 16 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்வி கற்க வறுமை ஒரு தடையல்ல. தமிழ் புதல்வன், புதுமைப்பெண், நான் முதல் போன்ற திட்டங்கள் மாணவ மாணவிகள் படிக்க நன்றாக உதவுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் வி.சி. சந்திரகுமார் எம்எல்ஏ, ஏ.ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ, துணை மேயர் செல்வராஜ், சூர்யா இன்ஜினியரிங் கல்லூரி பொருளாளர் கேசவன், துணைத் தலைவர் இளங்கோ, இணை செயலாளர் சஞ்சீவ் குமார் மற்றும் இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சியாமளா நன்றி கூறினார்.



