ஈரோடு, செப். 11 –
தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி இன்று தொடங்கியது. இதை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் கொலு பொம்மைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் லட்சுமி, கணேஷ், சரஸ்வதி, துர்க்கை, லட்சுமி நாராயணன், அஷ்ட லட்சுமி, குபேர பெருமாள் செட் மற்றும் பலவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றும் வருகிற 4 ந் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும் என்றும் பூம்புகார் மேலாளர் சேவியர் தெரிவித்தார்.



