அரியலூர், மே. 12-
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த இடையக்குறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக இக்கிராமத்தில் மின் வினியோகம் இல்லை எனவும் அதனால் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி, ஆண்டிமடம் – இடையக்குறிச்சி சாலையில், காலிக்குடங்களுடன் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுட்டனர். தகவலறிந்து வந்த குவாகம் போலீஸார் மற்றும் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர், நான் ஆண்டிமடம் வட்டார வருவாய் அலுவலர் நேரில் வருகை புரிந்து சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குவாகம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.