காரைக்குடி, 22.08.2026
அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் இடையிலான பெண்கள் இறகுப்பந்து போட்டி திருப்புத்தூரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பெண்கள் இறகுப்பந்து அணி சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற நிலையில், அழகப்பா அரசு கலைக் கல்லூரி வீராங்கனைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றியைப் பதிவு செய்தனர்.
போட்டியில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றி பெற்ற வீராங்கனைகளை நேரில் பாராட்டினர்.
தொடர்ந்து நடைபெறவுள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு கல்லூரிக்கு மேலும் பல வெற்றிகளை பெற்றுத் தர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.



