அஞ்சுகிராமம், ஜூன் 21 –
அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் அழகப்பபுரம் நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இணைந்து நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் குமரி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.டி.உதயம் உத்தரவின் படி அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டாரத் தலைவர் தங்கம் நடேசன் தலைமையில் நடந்தது. அழகப்பபுரம் நகர காங்கிரஸ் தலைவர் அண்ட்ரூஸ் மணி, பேரூராட்சி தலைவி அணிற்றா, வட்டார தலைவர்கள் பொறியாளர் கிங்ஸ்டன், பாக்கிய மணி, விளையாட்டு அணி மாவட்ட தலைவர் அருன் டிசாசோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயல்தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் சாம் மோகன்ராஜ், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி அணி தலைவர் ஜோயல் ஆகியோர் நல திட்ட உதவிகளை வழங்கினர். நகர காங்கிரஸ் தலைவர்கள் மயிலாடி நடேசன், தேரூர் பெண்ணி, மருங்கூர் ஹெலன், ஊராட்சி தலைவர்கள் மோசஸ், ரெத்ன பாண்டியன், ஐயப்பன், மனோ கவுண்சிலர்கள் ஜஸ்டின், பிரகாஷ், மலர் கொடி மற்றும் விசிக முற்போக்கு மாணவர் முன்னனி மாவட்ட செயலாளர் அழகை முத்துக்குமார் மற்றும் கலந்துகொண்டனர். வட்டார தலைவி தங்கம் நடேசன், பேரூராட்சி தலைவி அணிற்றா ஆகியோர் இணைந்து கேக் வெட்டினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.