முதுகுளத்தூர், செப். 08 –
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் புகழுக்கு மகுடம் சூட்டும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிடவும், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டவும் கோரிக்கை விடுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.டி. செந்தில்குமார் தலைமையில் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் எஸ். கதிரேசன், விளங்குளத்தூர் முத்துவேல், வெங்களகுறிச்சி ராஜசேகர், நகர அவைத்தலைவர் கருப்பசாமி, நகர துணை செயலர் குருசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.



