இந்தியாவின் 18 வது பாராளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் மக்களிடையே பணம் பரிமாற்றம் கடுமையாக பாதிக்கும் நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் அட்சய திருதியை முன்னிட்டு பொதுமக்கள் நகை வாங்க நகை கடைகளில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
கிருஷ்ணகிரி கே.திரையரங்கம் எதிரே, பெங்களூர் சாலை, ஜீவா மருத்துவமனை எதிரே, உள்ள வெங்கடேஸ்வரா நகை கடை உள்ளிட்ட நகை கடைகளில் பொதுமக்கள் நகை வாங்க குவிந்த வண்ணம் இருந்தனர். அட்சய திதியன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற ஐதீகம் உள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காலை முதலே நகை வாங்க ஆர்வத்துடன் வந்தனர். இது குறித்து நகைக்கடை உரிமையாளர் தெரிவிக்கையில்: பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு பொதுமக்கள் இடையே பணப்புழக்கம் குறைவாக இருந்தாலும் ஆர்வத்துடன் நகை வாங்க வருவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். காலை முதல் தொடங்கிய நகை விற்பனை இரவு வரை தொடர்ந்ததால் நகை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.