வேலூர், செப். 17 –
வேலூர் தோட்டப்பாளையத்தில் வேலூர் கேரள சமாஜம் ஓணம் பண்டிகை 44 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்ரீபுரம் பொற்கோயில் அறங்காவலர் மற்றும் இயக்குனர் டாக்டர் எம். சுரேஷ்பாபு, சி.எம்.சி சித்தூர் கேம்பஸ் மனநல மருத்துவர் டாக்டர் சஜின் டிட்டோ, கவுன்சிலர் வி.எஸ். முருகன், வேலூர் கேரள சமாஜம் அறங்காவலர் மற்றும் நிறுவனர் பி. ராதாகிருஷ்ணன், டிரஸ்டி பொருளாளர் சேதுமாதவன், டிரஸ்டி பிரபாகரன், ரஞ்சித், செயலாளர் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு குழுவினர்கள் சார்பில் பரிசுகள் வழங்கினர்.



