திருச்சி, ஜூன் 15 –
திருச்சி மாவட்டம் அல்லித்துறை அருகே அதவத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், நண்பர் நாகராஜுடன் இருசக்கர வாகனத்தில் வயலூர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனுக்கு அடியில் சிக்கிய இருவரும் சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த நாகராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



