போகலூர், செப். 10 –
செங்கல்பட்டு மாவட்டம் வேல்ந்துருகன் காலனி கீழ்கட்டளையை சேர்ந்த சாமிநாதன் ராஜு என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த
09-08-2025 சனிக்கிழமை அன்று நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன சாமிநாதன் ராஜுவின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பிற்கு தகவல் தரப்பட்டது.
அதன் அடிப்படையில் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மத் வேண்டுகோளுக்கு இணங்க சமூக நலத்துறை செயலாளர் கொடிபள்ளம் சாதிக் பாஷா முயற்சியில் ரியாத் மண்டல சமூக நலத்துறை துணை செயலாளர் அய்யம்பேட்டை கட்டுவா அஜ்மி ஆகியோர் இந்திய தூதரகம் மற்றும் அவர் பணியாற்றிய நிறுவனத்தின் உதவியுடன் அனைத்து பணிகளையும் முடித்து ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு 9.9.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை அனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு சென்றடைந்த சுவாமிநாதன் ராஜு உடலை மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே. ஜாகிர் உசேன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர்கள் சுவாமிநாதன் ராஜு உடலை பெற்று ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் எஸ்.எஸ். அப்துல் ரகுமான் அவரது சொந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளையில் இருக்கக்கூடிய அவர்களுடைய இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.
சுவாமிநாதன் ராஜு உடலை பெற்றுக் கொண்ட அவர்களுடைய உறவினர்கள் இறந்த உடலை சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து சேர்த்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள். இப்பணியில் சமூகநலத்துறை துணை செயலாளர் வல்லம் சையத் அலி, மண்டலத் துணைச் செயலாளர் ஆஷிக் இக்பால் உள்ளிட்ட பலரும் துணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



