மார்த்தாண்டம், செப். 23 –
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (83). இவரது மகன் ராஜேஷ் (39). கொத்தனார். இவர் மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தினசரி மது குடித்துவிட்டு வந்து தந்தையை கொடுமைப்படுத்தி வந்தாராம். நேற்று போதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ் தந்தை மாரிமுத்துவிடம் தகராறு செய்து தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து வீட்டிலிருந்த மண் வெட்டியால் ராஜேஷ் கழுத்தில் வெட்டினார். ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


