தருமபுரி, ஏப்ரல் 27 –
தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் பேருந்து நிலையம் , வட்டார வளர்ச்சி அலுவலகம் பகுதியில் உள்ள பழச்சாறு விற்பனை கடைகள், ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை பென்னாகரம் வட்ட அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் சேர்மானங்கள், சர்க்கரை, தயாரிப்பு தேதி, சுகாதாரம் உணவு பாதுகாப்பு உரிமைகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தனர். இதில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத இரண்டு பழக்கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 1,000 விதம் , ரூ. 2,000 அபராதம் விதித்தனார்.
மேலும் மாம்பழம் வரத்து தொடங்க உள்ளதால் செயற்கை முறைகளில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது. உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.


