சுசீந்திரம், ஜூலை 27 –
தமிழகத்தில் இந்து அறநிலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்களில் ஆலய சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இராஜாக்கமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் புத்தளம் ஜங்ஷனில் வைத்து நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் வக்கீல் ஆர். இராஜேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் பி. காமராஜ் வரவேற்புரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் எஸ். மார்த்தாண்டன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணகுமார், பா.ஜ.க. பிரச்சார பிரிவு செயலாளர் வக்கீல் எஸ். ரமேஷ், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாவட்ட தலைவர் மதுசூதனபெருமாள், மாவட்ட துணைத் தலைவர் மணிதணிகைகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே. ராஜேஸ்வரன் எழுச்சி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. வர்த்தக பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் டி. ஸ்ரீ செல்வன், வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல். பி.ரமேஷ், மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளும், பா.ஜ.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



