நாகர்கோவில், ஜூலை 20 –
ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்படுத்தி வருகிறது. இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராமன்புதூர் புன்னைநகர் சந்திப்பில் மாபெரும் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் செல்வன், சிவபிரபு, மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



