திருவெண்ணெய்நல்லூர், ஆக. 15 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பி.டி.ஓ., முல்லை தலைமை தாங்கினார். பி.டி.ஒ., பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பள்ளி மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட எழுது பொருள் உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். இதில் பி.டி.ஒ., அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.



