திருப்பூர், செப்டம்பர் 16 –
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளரும் திருப்பூர் மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 2000 பேர் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வாவிபாளையம் அருகே உள்ள கொங்கு கலையரங்கம் மஹாலில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஹேமந்த் ஏற்பாட்டில் பிரதோஷ், விஜய் மணி ராகுல், மேகலா, அஸ்வின் பிரசன்னா, ஜூன்வா, ஆஷிக் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த விழாவில் மாவட்ட அவை தலைவர் நடராசன், மாநில பிரச்சாரக் குழு செயலாளர் உமா மகேஸ்வரி, பாண்டியன் நகர் பகுதி கழக செயலாளர் ஜோதி, 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் ராமதாஸ், வட்டக் கழக செயலாளர்கள் சுரேஷ், பாப்புச்சாமி, மாமன்ற உறுப்பினர்கள் வேலம்மாள், விவிஜி காந்தி, பட்டிமன்ற பேச்சாளர் சகோதரி நாகநந்தினி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலன், தலைமைக் கழக பேச்சாளர் ரஜினி செந்தில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அசோக், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கௌரி, சிறுபான்மை அணி முன்னாபாய், மகளிர் தொண்டரணி காளீஸ்வரி, ஐடிவிங் பொறுப்பாளர்கள் அருண், நவீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



