திருச்சி, ஏப். 29 –
திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே, சென்னை நோக்கிச் சென்ற குருவாயூர் ரயிலில் அடிபட்டு சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் வெள்ளை நிற ஊதா கட்டம் போட்ட சட்டை, நீல நிற பேண்ட் மற்றும் கருப்பு காலணி அணிந்திருந்தார். அவர் இஸ்லாமியர் என தெரிய வந்துள்ளது. திருச்சி ரயில்வே போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



