தஞ்சாவூர், ஜூன் 25 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் இடமாற்றம் மற்றும் நியமனத்திற்கு மாவட்ட கலெக்டர் ரேவதி உத்தரவிட்டார். பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியர் (முத்திரை கட்டணம்) மூர்த்தி தஞ்சாவூர் வட்டாட்சியர் ஆகவும், கும்பகோணம் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரேம்குமார் திருவையாறு வட்டாட்சியர் ஆகவும், பாபநாசம் வட்டவழங்கள் அலுவலர் அகஸ்தியன் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆகவும், தஞ்சாவூர் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திப்புசுல்தான் திருவிடை மருதூர் வட்டாட்சியர் ஆகவும், தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவக்குமார் தஞ்சாவூர் தனி வட்டாட்சியர் ஆகவும் (நிலை எடுப்பு) திருவையாறு வட்டாட்சியர் முருககுமார் தஞ்சாவூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரத்தநாடு வட்டாட்சியர் தர்மேந்திரா பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியராகவும், (ஆதிதிராவிடர் நலம்) பட்டுக்கோட்டை வட்டாட்சியர் யுவராஜ் பாபநாசம் வட்ட வழங்க அலுவலராகவும், திருவிடைமருதூர் வட்டாட்சியர் சாந்த மீனா கும்பகோணம் தனி வட்டாட்சியராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியர் (நில எடுப்பு) உமா மகேஸ்வரி நாகப்பட்டினம் அலகு தனி வட்டாட்சியர் ஆகவும் (முத்திரை கட்டணம்) ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியர் கண்ணன் (ஆதிதிராவிடர் நலம்) பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியர் ஆகவும் (முத்திரை கட்டணம்) தஞ்சாவூர் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சுந்தர செல்வி தஞ்சாவூர் தனி வட்டாட்சியர் ஆகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மகப்பேறு விடுப்பில் சென்ற தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள் மணி ஒரத்தநாடு வட்டாட்சியராகவு ம் நியமிக்கப்பட்டுள்ளார்.


