அனுப்பர்பாளையம், செப். 4 –
தமிழகம் முழுவதும் டார்லிங் கோ அப்ளையன்ஸ் பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக டார்லிங் ஹோம் அப்ளையன்ஸின் 164-வது கிளையின் புதிய ஷோரூமை திருப்பூர் மாநகராட்சி மேயர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் திறப்பு விழா சலுகையாக டார்லிங் ஹோம் அப்ளையன்ஸில் பொருள் வாங்குபவர்களுக்கு திறப்பு விழா சலுகையாக எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருள்களுக்கு சிறப்பு தள்ளுபடி உண்டு.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் அனுசுயா தேவி, திமுக பகுதி செயலாளர் ராமதாஸ், கிட்ஸ் கிளப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மோகன் கார்த்திக், திமுக நிர்வாகி சிவபாலன், திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க நிர்வாகி சக்திவேல் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டார்லிங் குரூப் சார்பில் அஜித்குமார், செல்வி அஜித்குமார், அர்ச்சனா மற்றும் அரவிந்த் ஆகியோர் செய்தனர்.



