கோவை, ஆகஸ்ட் 30 –
கோவை மாவட்டம் வடவள்ளி அருள்மிகு மருதமலை சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் கலந்து கொண்டு துவக்கி வைத்து மருந்து பெட்டகங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்கினார்.
இந்த மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது மூக்கு தொண்டை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் மருத்துவம், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், ஆயிஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் போன்ற மருத்துவம் இடம் பெற்று இருந்தது.
உடன் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, நகரமைப்பு குழு தலைவர் சந்தோஷ், கவுன்சிலர்கள் சம்பத், காயத்ரி, கார்த்திக் செல்வராஜ் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மருத்துவத்துறை சிகிச்சைகளை எடுத்துக்கொண்டனர்.



