கோவில்பட்டி, ஜூன் 30 –
கோவில்பட்டியில் சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் இலக்கியச் சாரல் பதினொன்றாவது நிகழ்வாக பட்டாம்பூச்சி சொன்ன கதை புத்தகத் திறனாய்வு கூட்டம் சிவதாம் கல்வி அறக்கட்டளை கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நல்லாசிரியர் ஜான் கணேஷ் தலைமை தாங்கினார். ஆசிரியை கவிதா அனைவரையும் வரவேற்றார். உரத்த சிந்தனைத் தலைவர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். கம்பன் கழகத் துணைத்தலைவர் இராஜாமணி, கவிஞர் கவிமேகம், இந்திராணி அம்மையார், கவிதாயினி விநாயக சுந்தரி, பணி ஒய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
“பட்டாம் பூச்சி சொன்ன கதை” என்ற புத்தகத்தை ஆசிரியைகள் முருக சரஸ்வதி, ஜெயபாரதி, சுப்புலட்சுமி, குருலட்சுமி, இராதா மற்றும் திருநாவுக்கரசர் வங்கி மேலாளர் ஓய்வு ஆகியோர் திறனாய்வு செய்தனர். கூட்டத்தில் எழுத்தாளர்கள் இராஜேஷ் சங்கரப்பிள்ளை, இப்ராஹீம், கம்பன் கழகத்தலைவர் துரைப் பாண்டி, பணி ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சங்கர், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், கோபாலகிருஷ்ணன், ஜெயா ஜனார்த்தனம் பேராசிரியர் செல்வம் உட்பட பலர்கலந்து கொண்டனர். புத்தக ஆசிரியர் பொன்னுராஜ் ஏற்புரை வழங்கினார். இலக்கியச்சாரல் நிறுவனர் தினகரன் கல்லூரி பேராசிரியர் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்தினார். இறுதியாக கவிஞர் போத்திராஜ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.



