By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை ஆற்றில் சிவசேனா பிரமுகர் கொன்று வீச்சு: கொலையாளிகள் கேரளாவில் பதுங்கல்: கைது செய்ய தனிப்படை தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை ஆற்றில் சிவசேனா பிரமுகர் கொன்று வீச்சு: கொலையாளிகள் கேரளாவில் பதுங்கல்: கைது செய்ய தனிப்படை தீவிரம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை ஆற்றில் சிவசேனா பிரமுகர் கொன்று வீச்சு: கொலையாளிகள் கேரளாவில் பதுங்கல்: கைது செய்ய தனிப்படை தீவிரம்

Last updated: August 3, 2026 6:35 pm
August 3, 2026
5 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 3 –

களியக்காவிளை அருகே கேரளா பகுதி செங்கவிளை பகுதியை சேர்ந்தவர் சுதீசன் அதுல் (30). இவர் கேரள மாநில சிவசேனா பிரமுகர் ஆக உள்ளார். இந்த நிலையில் மார்த்தாண்டம் அருகே உள்ள குழித்துறை ஆற்றில் இவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி ஆற்றில் கிடந்த அவரது உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலில் காயங்கள் இருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் சுதீசன் அதுலுடன் 4 பேர் சுற்றி திரிவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு இடையே இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிலரை தனிப்படை போலீஸ் பிடித்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சதீசன் அதுல் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்கும் வரை சதீசன் அதுலின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழ்நாடு சிவசேனா தலைவர் ரமேஷ் குமார் விடுத்துள்ள அறிக்கையில்:- கேரள மாநில சிவசேனா பிரமுகர் கொலையாளிகளை பிடிக்க தமிழக அரசும், குமரி மாவட்ட காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்த பிறகு சதீசன் அதுலின் உடலை பெற்றுக் கொள்வோம். என கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

காட்டாத்துறை பகுதியில் கண்டெய்னர் லாரியில் 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
மாநில அட்யா பட்யா போட்டியில் குமரி அணியினருக்கு வெள்ளிப் பதக்கம் – விளையாட்டு அதிகாரி பாராட்டு
பில்லாந்திப்பட்டி சுங்கச்சாவடி திறக்க முயற்சிப்பதை எதிர்த்தும், நிரந்தரமாக மூடவும் வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

September 16, 2024
76 Views
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக கேத்லேப் மூலம் பிறவி இதய குறைபாடுக்கு சிகிச்சை!!
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு விழா
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை
மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account