குளச்சல், செப். 22 –
குளச்சல் அருகே உள்ள குறும்பனை பகுதி சேர்ந்தவர் சகாய ஜெனி (45). மீனவர். இவரது மனைவி ஷோபா மோள் (35). கணவன் மனைவிக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. மேலும் சகாய ஜெனி வேறு சில பெண்கள் உடன் பழகி வந்ததாக ஷோபா மோள் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக திடீரென வீட்டிலிருந்த 34 ஆயிரம் பணத்துடன் வெளியே சென்ற சகாய ஜெனி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதை அடுத்து குளச்சல் காவல் நிலையத்தில் ஷோபா மோள் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்


