குலசேகரம், ஆக. 8 –
குலசேகரம் அடுத்த பாகோடு புத்தன்வீடு பகுதியை சேர்ந்தவர் அனுப் (40). இவரது மனைவி ஐஸ்வர்யா (31). இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் 7ம் தேதி ஐஸ்வர்யா தனது இரு குழந்தைகளுடன் நாககோட்டில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து தோழியை சந்தித்து விட்டு வருவதாக குழந்தைகளுடன் வெளியே சென்ற ஐஸ்வர்யா நீண்ட நேரமாக வீடு திரும்பி வரவில்லை. குழந்தைகளையும் காணவில்லை.
இது குறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் கணவர் அனுபுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து அனுப் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.