திருப்பத்தூர், ஜூலை 25 –
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட குட்டகிந்தூர் தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியினை பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆம்பூர் எம் எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறை, எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் மகாதேவன், வட்டார கல்வி அலுவலர்கள் தென்னவன், பீட்டர், முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சுவிதா, மாதனூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசுதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
உதவித் தலைமை ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார். ஸ்மார்ட் வகுப்பறை, எண்ணும் எழுத்தும் வகுப்பறை அமைக்க நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.