By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்கம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்கம்

Last updated: June 24, 2025 12:18 pm
June 24, 2025
72 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 24 –

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆந்திரா மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இந்த மாங்கனி கண்காட்சியை குடும்பத்தினருடன் வந்து பார்ப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள கலைஞர் திடலில் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் பச்சியப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு மாங்கனி கண்காட்சியினை திறந்து வைத்து அரசு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த துறை வாரிய அரங்குகளையும் பார்வையிட்டார். முன்னதாக மயிலாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் மூலம் அனைவரையும் வரவேற்றனர். பின்னர் அங்கு காட்சிகளுக்காக வைக்கப்பட்டிருந்த அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, காதர், இமாம்பசந்த், பீத்தர், செந்தூரா, மல்கோவா, பெங்களூரா உள்ளிட்ட வட இந்திய மா ரகம் மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட மாங்காய்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் சக்கரப்பாணி தமிழக முதல்வரின் பொற்கால ஆட்சி சிறந்த முறையில் செயல்பட்டு வருவதோடு அனைத்து துறைகளும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதினால் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும் தமிழகத்தில் விவசாயத்தினை மேம்படுத்த விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மட்டுமின்றி வட்டியில்லா கடன்களும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் 240 பயானாளிகளுக்கு சுமார் 2 கோடியே 52 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கியதோடு குக்கிராமங்களுக்கு 40 ரேசன் கடைகளையும் திறந்து வைத்து தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை மலர்களையும் வெளியிட்டார். தொடர்ந்து 40 நாள்கள் நடைபெற உள்ள இந்த மாங்கனி கண்காட்சியில் தினமும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது என்றும் இந்த 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் தோட்டக் கலைத்துறை சார்பில் மலர்கள் மற்றும் காய்கறிகள் நவதானியங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஏர் கலப்பை, மாட்டுவண்டி, மயில், அணில் உள்ளிட்ட படைப்புகளை ஏராளமான மக்கள் கண்டுகளித்ததோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் ஸ்டாலின் வருகை; கலைகட்டும் கிருஷ்ணகிரி
உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம்
சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்
மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

June 29, 2024
97 Views
மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
மதங்களை தாண்டி மனிதநேயம் மலர்ந்த தருணம்: தேவதானப்பட்டியில் ஒற்றுமையின் உண்மை முகம்!
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
தேசிய அளவிலான ஒரு நாள் சிறப்பு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account