நாகர்கோவில், ஆக. 03 –
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவிதாங்கோடு பகுதியில் மனைவியின் சிறுநீரகம் செயல் இழந்ததை வைத்து மருத்துவச் செலவுக்கு உதவிட வேண்டும் எனக் கூறி பல நபர்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தி பணம் பெற்று, அந்த பணத்தில் பல பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த கணவன் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மற்றும் உறவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தனது மகள் நோய் வாய்ப்பட்டு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவளுடைய நிலைமையை நன்கு அறிந்தும் தினந்தோறும் அவளை அடித்தும் கொடுமை படுத்தியது மட்டுமல்லாமல் வீட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த ரூ.3 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு ஊட்டி, கொடைக்கானல் என வேறு பெண்களுடன் உல்லாச சுற்றுலா சென்றதால் இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உங்கள் குடும்ப பிரச்சினை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என பேசி காவல்துறையினர் அனுப்பி விட்டதால் நோய்வாய்ப்பட்ட மகள் என்று கூட பார்க்காமல் காவல்துறையும் நியாயம் விசாரிக்காமல் நடந்து கொண்ட விதம் வேதனை அளிப்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டு எனது மகளுக்கு நீதி கிடைக்க ஆவண செய்வது மட்டுமல்லாமல் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் எனது மகளை தவிக்க விட்டு விட்டு மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணத்தையும் எடுத்துச் சென்ற மகளின் கணவர் ஆசிக் அலியை கைது செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.



