மார்த்தாண்டம், ஜூலை 7 –
அருமனை அருகே உள்ள மேல்புறம் சாலை வழியாக கடையாலுமூடு நோக்கி கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு மினி லோடு வாகனம் ஒன்று இரவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்து அளவுக்கு அதிகமாக துர்நாற்றம் வீசியது. இது தவிர அந்த வாகனத்தின் பின்னால் பைக்கில் சென்றவர்கள் மீது கழிவு வாகனத்தில் இருந்து வடிந்த தண்ணீர் தெறித்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மினி லோடு வேனை பின் தொடர்ந்து சென்று உத்தரங்கோடு பகுதியில் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் வாகன ஓட்டுநர் வேகமாக சென்றதால் கழிவுகளில் உள்ள நீர் மீண்டும் பொதுமக்கள் மீது தெறித்தது.
பின்னர் முழுக்கோடு பகுதியில் சென்றபோது பின் தொடர்ந்து பின்னர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த குலசேகரம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்ற லூக்கா (52) என்பவர் மேலும் வழக்கு பதிவு செய்தனர்.



