சென்னை, அக். 17 –
அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ் ஓ.எம்.ஆர் 150 நாட்களில் 150 மேற்பட்ட ரோபோடிக் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்து மூட்டு சிகிச்சையில் புதிய சாதனை படைத்திருக்கிறது. அறுவை சிகிச்சைகளில் துல்லியம் மற்றும் மருத்துவ பயனாளர் குணமடைவதில் புதிய தர நிலைகளை நிர்ணயித்து வருவதன் மூலம் தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக் டி.கே.ஆர் மையங்களில் ஒன்றாக அப்போலோ ஓ.எம்.ஆர் முன்னணி வைக்கிறது.
இந்த அறுவை சிகிச்சைகளில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான ” ஸ்ட்ரைக்கர் ” தயாரிப்பான அதிநவீன “மேக்கோ ஸ்மார்ட் ” ரோபோடிக்ஸ் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் சிக்கலான முழங்கால் பிரச்சனைகளை உள்ள மருத்துவ பயனர்களுக்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் பெரும் பலன்களை அளித்து வருகிறது . மேலும் பாரம்பரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை விட குறைந்த அளவு ஊடுருவதாலும் பாதுகாப்பான மாற்று வழியாகவும் உள்ளது .
இந்த சாதனைகள் மூத்த ஆலோசகர்கள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் வெங்கட்ராமன் சுவாமிநாதன், டாக்டர் தாமோதரன் பி .ஆர், டாக்டர் செந்தில் கமலசேகரன் மற்றும் டாக்டர் திருவேங்கடா ஆகியோர் குழுவினரின் இணைந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள் .
ரோபோடிக் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்த குறித்து பேசிய அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஓ. எம் .ஆர் இன் மூத்த ஆலோசகர் மற்றும் எலும்பில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கட்ராமன் சுவாமிநாதன் கூறுகையில்: ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் முழங்கால் முழுவதையும் மாற்றும் அறுவை சிகிச்சை என்பது ஒரு தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல எலும்பியல் பராமரிப்பில் மூட்டு சிகிச்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னேற்றமாகும்.
வழக்கமான பாரம்பரிய முறையிலான அறுவை சிகிச்சை மருத்துவ பயனாளர்களுக்கு சிக்கலான ஒன்றாக கருதப்படும் சூழலில் கூட அவர்களுக்கு ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எளிதில் செய்ய பயன்படும். முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் இந்த நவீன தொழில்நுட்பம் வலியை குறைப்பதோடு மிக விரைவாக மீண்டு வர உதவுகிறது. முழங்கால் இயக்கத்தை மேம்படுத்துவதோடு அவர்களது வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துகிறது என்றார்.



