அஞ்சுகிராமம், செப். 12 –
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதல்வர் ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். மேலும் தமிழகமெங்கும் 10,000க்கும் அதிகமான இடங்களில் முகாம் நடைபெறும் எனவும் அறிவித்தார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் யூனியனுக்கு உட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சியில் 1 முதல் 8 வார்டு பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று அலுவலர்கள் டோக்கன் கொடுத்தனர்.
நிகழ்ச்சியினை அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவி ஜானகி, துணைத் தலைவர் காந்தி ராஜ் முன்னிலையில் செயல் அலுவலர் கிரேஸி உஷா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் திமுக பேரூர் செயலாளர் இளங்கோ, கவுண்சிலர்கள் வீடியோ குமார், ஜோஸ் திவாகர், நீலக்கண்ணன், தனம் செல்வக்குமார், அலுவலர் தமிழரசி, பரப்புரையாளர் ஜெனட் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் குறைகளை மனுக்களாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதிகாரிகள் 45 நாட்களுக்குள் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். முகாமில் மாவட்ட கலெக்டர் அழுகு மீனா மனுக்களை பெற்றார். ஒன்றிய செயலாளருமான வக்கீல் மதியழகன், துணை தலைவர் காந்தி ராஜ் பார்வையிட்டனர்.



