தென் தாமரைகுளம், அக்டோபர் 2 –
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காமராஜர் முழு உருவ சிலைக்கு அகஸ்தீஸ்வரம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வர்த்தக மாவட்ட செயலாளர் கிங்ஸ்லின், அகஸ்தீஸ்வரம் காங்கிரஸ் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், வர்த்தக காங்கிரஸ் துணை செயலாளர் குணசேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில வர்த்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஓ பி சி துறையின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கன்னியாகுமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான தா. ஆதிலிங்க பெருமாள், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் பேராசிரியர் முருகேசன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர், டாக்டர் விஜிலரசு, கொட்டாரம் வர்த்தக காங்கிரஸ் தலைவர், நாகேந்திரன், கன்னியாகுமரி காங்கிரஸ் பேரூர் தலைவர் ஜவகர், கன்னியாகுமரி முன்னாள் கவுன்சிலர் தாமஸ், பி எஸ் ராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



