விழுப்புரம், ஆகஸ்ட் 15 –
விழுப்புரம் நகராட்சி, கீழ்ப்பெரும்பாக்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதற்கான நிகழ்வை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.
தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் அவர்களுடன் திறந்தவெளி ஈப்பு வாகனத்தில் சென்று பார்வையிட்டார். மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் (அரசு உதவி பெறும்) மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஷ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மனம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் செயிண்ட் பிலோமினாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் இமேஜ் நடனப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அளவிலான 290 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் 5 வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணிக்கான ஆணைகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சிறப்பாக பணிபுரிந்த 15 தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகளும், மு விவசாயிகள் 3 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், அதிகட்ச வரி செலுத்திய 2 நிறுவன பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் உயர்கல்விக்கான அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக விழுப்புரம் நகரில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் இ.எஸ். உமா, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜெ.இ. பத்மஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த. யோகஜோதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



