திருப்பூர், ஜூலை 19 –
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே 1,000 சதுர அடி பரப்பளவில் திறக்கப்பட்ட ஷோரூம் தற்போது 4 ஆயிரம் சதுர அடி அளவில் விரிவுபடுத்தப்பட்டு புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் ஷோரூமை திறந்து வைத்து விற்பனையை முதல் தொடங்கி வைத்தார். அதை திருப்பூர் கிட்ஸ் கிளப் கல்வி நிறுவன தலைவர் மோகன் கார்த்திக் பெற்றுக்கொண்டார்.
இந்த ஷோரூமில் பல்வேறு வேட்டி ரகங்கள், சட்டைகள், பனியன், ஜட்டிகள், பெண்களுக்கான உள்ளாடைகள், குழந்தைகளுக்கான வேட்டி, சட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் கூறும்போது 43 ஆண்டுகளாக வேட்டி, சட்டை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். 25 ஆண்டுகளாக சில்லறை விற்பனையில் ஈடுபட்டு மாநிலங்கள் வாரியாக ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய கலாச்சாரமான வேட்டி, சட்டை அணிய ஊக்குவிப்பதுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கான ஆடைகளையும் தயாரித்து விற்பனை செய்கிறோம் என்றார்.
விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவன இயக்குனர் அழி சுமதி நாகராஜன், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், ரம்யம் சேலைகள் பிரிவு இயக்குனர் ஆர்த்திகா, குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன், ஹீரோபேஷன் சுந்தரமூர்த்தி, தலைமை செயல் அதிகாரிகள் கே.ஏ. செல்வகுமார், ஏ. கணபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



