By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
இராமநாதபுரம்

மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்

Last updated: June 30, 2025 1:31 pm
June 30, 2025 19 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 30 –

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆர் எஸ் மங்கலம் தாலுகா சுற்றுவட்டார ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொண்டியில் வடக்குத்தெரு சமுதாய நலகூடத்தில் நடந்தது. திருவாடனை வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயுப் கான் தலைமையில் நடைபெற்றது.

ஆலிம் முஹம்மது ருஸ்தின் தாவூதி ஆலிம் கிராத் நிகழ்த்தினார். தலைவர் ராமநாதபுரம் மாவட்டம் ஜமாத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது ஜலாலுதீன் அன்வாரி ஆலிம் வரவேற்புரை நிகழ்த்தினார். வட்டார ஐக்கிய ஜமாத் செயலாளர் கிராம நிர்வாக அலுவலர் ஃபாருக் தொகுத்து வழங்கினார். திருவாடனை வட்டாரம், ஆர் எஸ் மங்கலம் வட்டாரம் மற்றும் தொண்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள் தமுமுக மாநில செயலாளர், தொண்டி கிழக்கு தெரு ஜமாத் செயலாளர், தொண்டி சாதிக் மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான் தொடக்க உரை நிகழ்த்தினார்.

மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர், மாநில ஹஜ் கமிட்டி தலைவர், வக்பு வாரிய உறுப்பினர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் ப அப்துல் சமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: வக்பு திருத்த சட்டம் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், மதரசாக்கள், அடக்கஸ்தலங்கள் உள்ளிட்ட வகுப்புகளை சூறையாடும் நோக்கில் அவசர கதியில் ஒன்றிய பாசிச பாஜக அரசு இரவு நேரத்தில் இயற்றப்பட்ட சட்டம் தான் வகுப்பு ஒழிப்பு சட்டம்.

ஒரு தனிநபர் தனக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு காலம் தோறும் உதவிடும் ஒரு புரட்சிகர சமூக நல்வாழ்வு திட்டமாக நபிகளார் அறிமுகப்படுத்திய வக்பு முறையை சிதைக்கும் தீய எண்ணத்தில் அவசரக் கோலத்தில் கொண்டு வந்த திட்டம் தான் வக்பு திருத்த சட்டம் ஆகும். பாசிச பாஜக அரசு அவசரக் கதியில் கொண்டு வந்த இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் இந்த சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்திருந்த போதிலும் ஒன்றிய வக்பு வாரியம் சென்ட்ரல் வக்பு போர்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் எல்லா மாநிலத்தின் வக்பு வாரியங்களும் அவர்களுடைய சொத்துக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பாகும்.

இந்த நாசக்கார திட்டங்களை தவிடு பொடியாக்க அனைத்து ஜமாத்தார்களும் உலமாக்களும் இந்த அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நினைக்கும் நல் உள்ளம் கொண்ட அனைவரும் ஒருமித்த குரலாக ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் மதுரையில் ஜூலை 6 ல் அனைவரும் கலந்து கொள்ள ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். மேலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. ஆனால் இந்திய நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து கொண்டே செல்கிறது. இதன் பின்னணியில் திட்டமிட்ட சில சூழ்ச்சிகள் இயங்கி வருகின்றன.

2006ல் கொடுக்கப்பட்ட நீதி அரசர் சச்சார் ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டு இன்று மேலும் வலுவடைந்துள்ளது. சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் போக வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய மக்கள் வாழக்கூடிய தொகுதிகள் முதல் கட்டமாக ராஜேந்திர பிரச்சார அறிவித்த அந்த ஆய்வு அறிக்கை பரிந்துரையை நடுநிலை படுத்த வேண்டும். அதிகமாக வாழக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அவர்களுக்கான தொகுதிகளை சிறுபான்மை மக்கள் வெற்றி வாய்ப்பு பெறக்கூடிய வகையில் அந்த தொகுதிகளை இணைத்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் மறுவரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரை மாநகரில் ஜூலை 6 ஆம் தேதி மாபெரும் பேரணியும் மாநாடும் நடைபெற இருக்கின்றன.

லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த லட்சிய பேரணி மாநாட்டில் அனைத்து ஜமாத் உடைய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உலமாக்களும் அறிஞர் பெருமக்களும் அனைத்து மக்களும் வருவதற்கு உண்டான ஏற்பாடுகளை இந்த நாட்டினுடைய அரசமைப்புச் சட்டத்தை காப்பதற்கும் நமது உரிமையை மீட்டெடுப்பதற்கும் அனைவரும் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனையோடு தொண்டி ஐக்கிய ஜமாத் துணைத் தலைவர், வழக்கறிஞர் ஜிப்ரி, அலுவலக மேலாளர்கள் அக்பர் சுல்தான், ஆபித் காதர், பரக்கத் அலி மைதின் ஆகியோர் செய்திருந்தனர். ஆர்.எஸ் மங்கலம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் புரோஸ்கான் நன்றி கூறினார்.

You Might Also Like

திருவிழா தேர் போல் எடப்பாடியார் வாகனத்தை நகர் செயலாளர் பால்பாண்டியன் மக்கள் வெள்ளத்தில் அழைத்து சென்று அசத்தல்

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை இளைஞர் பட்டாளத்துடன் ஆடி பாடி அழைத்துச் சென்ற ஆர்.ஜி மருதுபாண்டியன்

ராமநாதபுரம் சுகம் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம்

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம்

ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கல்யாணம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ரூ.17,35,000 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி

November 18, 2024 22 Views
வீட்டிற்கான குடிநீர் இணைப்பு பணிகள்
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பாக
கால் மாறி ஆடிய திருக்கோலத்தில் நடராஜர் அருள்பாலிப்பு
கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?