தருமபுரி, செப்டம்பர் 19 –
தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் D ஸ்கொயர் மல்டி டெக் ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஆராய்ச்சி மைய கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் செல்வபாண்டியன், மருத்துவ அலுவலர் அனுராதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் D ஸ்கொயர் மல்டி டெக் தலைமை நிர்வாகி கலையரசன் மற்றும் திவ்யா, சுகாதார மேற்பார்வையாளர் சிலம்பரசன் மற்றும் ஏனைய பிற அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ரத்ததான முகாமில் 75 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
மேலும் இந்த முகாமில் ரத்த தானம் வழங்கிய அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் D ஸ்கொயர் சார்பாக பழங்கள் மற்றும் பழச்சாறுகள் ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பிரசாத் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.



