புதுக்கடை, ஜன.22-
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரெஜிதாஸ் மனைவி ஜான்சி ராணி (42). இவர் அதே பகுதியை சேர்ந்த மோகனன் (60) என்பவருக்கு ரூபாய் 5 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் தங்க செயினை கடனாக கொடுத்துள்ளார். கடன் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தையும் செயினையும் மோகனன் திருப்பி கொடுக்கவில்லை.
இதையடுத்து சம்பவ தினம் கொடுத்த பணத்தையும் நகையும் கேட்க ஜான்சிராணி தனது கணவர் ரெஜிதாசுடன் மோகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று பணத்தையும் நகையும் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மோகனன், அவரது மகன்கள் விஜு (35), சஜு (32) ஆகியோர் சேர்ந்து ஜான்சிராணியையும், ரெஜிதாசையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஜான்சி ராணி, ரெஜிதாஸ் ஆகியோர் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கடை போலீசார் தந்தை மகன்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


