ஈரோடு, நவ. 7 –
ஈரோடு நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உடல் கூறியல் துறைக்கு கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராமண்ணவர் அறக்கட்டளையிலிருந்து உடல் தானம் வழங்கப்பட்டது. இதை ராமண்ணவர் கேஎல்இ அகாடமி ஆப் ஹையர் மஹிந்வதஷ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் செயலர் டாக்டர் மஹிந்வதஷ் வழங்கினார். டாக்டர் மஹந்தேஷ் ராமண்ணவர் உடல் தானத்தின் முக்கியத்துவம் மற்றும் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு பற்றியும் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் டாக்டர் சந்திரபோஷ் வரவேற்றார். நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த உடல் தான பிரமாணத்தில் கலந்து கொண்டனர்.
இதில் நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி மற்றும் கல்லூரியின் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



