திருப்பூர், அக். 04 –
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் மேயர் ந. தினேஷ் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளர் எம்.பி. அமித் ஆகியோர் முன்னிலையில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பிஜேபி, அமுமுக, இந்திய ஜனநாயக கட்சி, பல்வேறு கட்சியினர் திருப்பூர் குமரன் பிறந்த நாள் இன்று மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



