தஞ்சை ஜூலை 21 தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் டிராக்டர் விபத்தில் ஏற்பட்ட 4 வயது சிறுவன்
காலின் பிரதான எலும்பு விபத்தில் உடைந்ததோடு கீழ்ப்புறக்காலின் ஒரு இரத்தநாளமும் துண்டிக்கப்பட்டிருந்ததால் ஏறக்குறைய முற்றிலும் துண்டிக்கப்படும் அளவிற்கு இச்சிறுவனின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது.
மூன்று மணி நேரங்கள் நீடித்த முதல் அறுவைசிகிச்சையில் வெட்டப்பட்ட இடத்தில் இருந்த மாசுகள் அகற்றப்பட்டன, மென்திசுக்கள் பாதிப்பின்றி தக்கவைக்கப்பட்டன மற்றும் எலும்புடன் ஒரு வெளியார்ந்த பொருத்தி இணைக்கப்பட்டது.
இது குறித்து
மருத்துவமனையின் எலும்பியல் சிகிச்சை துறையின் தலைவரும் முதுநிலை வல்லுநருமான டாக்டர். K. பார்த்திபன், அத்துறையின் இணை சிறப்பு நிபுணர் டாக்டர். S. சண்முக ஹரிஹரன் ஆகியோர் கூறியிருப்பதாவது.
நாகப்பட்டினம் மாவட்டம் பிள்ளையார் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த நான்கரை ஆண்டுகள் வயதுள்ள ஒரு சிறுவனான ரக்ஷனின் இடதுகாலில் டிராக்டர் ஏறி இறங்கிய ஒரு வினோதமான விபத்தால் எலும்பு முறிவும் கடும் காயமும் ஏற்பட்டன. கீழ்ப்புற காலின்
முக்கிய எலும்பு இரண்டு துண்டுகளாக உடைந்து விட்டது. அத்துடன், கீழ்ப்புற காலிலுள்ள இரண்டு முக்கியமான இரத்தநாளங்களுள் ஒன்று கிழிந்து துண்டாகி விட்டது. அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இச்சிறுவனை அழைத்துச் சென்ற போது, காலை வெட்டியெடுப்பதுதான் சாத்தியமுள்ள ஒரே விருப்பத்தேர்வு என்ற அறிவுறுத்தப்பட்டது. அதை ஏற்காத அச்சிறுவனின் பெற்றோர்கள்
மீனாட்சி மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். காயமடைந்த பகுதியில் இறந்த திசுக்கள் தோல் மற்றும் மாசுகளை அகற்றும் செயல்முறையை நாங்கள் உடனடியாக செய்தோம் மென்திசுக்களுக்கு பாதிப்பின்றி திறந்த நிலையிலிருந்து காயங்களுக்கு தையலிட்டு உடைந்த எலும்புகள் உரிய நிலையில் இருக்குமாறு செய்ய ஒரு வெளியார்ந்த பொருத்தியையும் காலுடன் இணைத்தோம் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது மிக நுட்பமாகவும் திறம்படவும் செய்யப்பட்டது.
கீழ்ப்புற காலுக்கு இரத்த ஓட்டம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவாறு இந்த செயல்முறை நிகழ்த்தப்பட்டது மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கால் பகுதியில் எந்த தொற்றும் ஏற்படாதவாறு தடுக்கப்பட்டது. என்று
தெரிவித்தனர்.