வேலூர், ஜூலை 10 –
வேலூர் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் இரவு காவலாளியாக பணியாற்றி வரும் வெங்கடேசன் (49). இன்று காலை தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள செல்வ கணபதி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு கோவில் முன்பாகவே தீ குளித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடல் முழுக்க தீக்காயங்களோடு இருந்த வெங்கடேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பித்த நிலையில் அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை விசாரணையில் வெங்கடேசன் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனால் கடன் தொல்லை தாங்காமல் தீக்குளித்ததாக தெரிவித்தனர்.



