By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை
சிவகங்கை

காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை

Last updated: July 1, 2025 12:48 pm
July 1, 2025 5 Views
Share
SHARE

திருப்புவனம், ஜூலை 01 –

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் சோலை கண்ணன் மாபெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணையில் கிறிஸ்தவ நாடாரான லாக்கப்பில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பிற்கு சமுக ஆர்வலர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அன்றைய எதிர் கட்சியான திமுக ஸ்டாலின், உதயநிதி உள்பட கண்டனங்களை தெரிவித்தார்கள்.

விசாரணையில், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இன்று வரைக்கும் சிறையில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் திமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு கனிமொழி மூலமாக 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

அதே போல் இப்பொழுது நடைபெறுகின்ற திமுக ஆட்சியில் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணிபுரியும் தனியார் காவலாளி 27 வயதான அஜித்குமாரை ஒரு வழக்கு சம்பந்தமாக காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற பொழுது மர்மமான முறையில் மரணம் அடைந்தது இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் மட்டும் லாக்கப் மரணம். ஆனால், காவல் துறையினர் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று மர்மமான முறையில் இறந்தது மாரடைப்பு மரணமாம்? கிறிஸ்தவ நாடாரான லாக்கப்பில் மரணமடைந்த ஜெயராஜ் பென்னிக்கிஸ் ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் எல்லாம் அஜித்குமாருக்கு குரல் கொடுக்க தயங்குவது ஏன்? எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஜெயராஜ் குடும்பத்தாருக்கு 25 லட்சம் ரூபாய் நிதி கொடுத்த திமுக தற்பொழுது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தங்களது ஆட்சியில் லாக்கப் மரணமடைந்த அஜித்குமார் குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்காதது ஏன்?

அதிமுக ஆட்சியில் ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கு சம்பந்தப்பட்ட காவல்
துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தார்கள்.
திமுக ஆட்சியில் அஜித்குமார் மரணத்திற்கு சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்காமல் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் எடுத்தது ஏன்? ஜெயராஜ் பென்னிக்ஸ் கிறிஸ்தவ நாடார் என்பதால் நீதியும் நிதியும் வழங்கப்பட்டது.

ஆனால் அஜித்குமார் இந்து நாடார் என்பதால் நீதியும் நிதியும் மறுக்கப்பட்டதா? என்று கேள்விகள் எழுகிறது. மரணத்தில் கூட மதம் பார்த்து தான் கண்டனம் தெரிவிப்பார்களா?நீதியும் நிதியும் வழங்குவார்களா? இது எந்த விதத்தில் நியாயம்? தேசத்திற்கு எதிராக மத ரீதியாக செயல்படும் குண்டு வெடிப்பு, தேச விரோத இஸ்லாமிய பயங்கரவாதிகள், பிரிவினை வாத தேச துரோகிகள், ஊழல்வாதிகள், கனிமவள கொள்ளைகாரர்கள், கொலைகாரர்கள், போதை வஸ்து வியாபாரிகள் அனைவரும் இந்நாட்டில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்கள் மீது இதுபோன்ற எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் குற்றவாளிகளுக்கு ராஜ மரியாதை கொடுக்கப்படுகிறது. ஆனால் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த அஜித்குமாரை மட்டும் விசாரணை என்ற பெயரில் மரணம் அடையும் வரையும் கொலை வெறி தாக்குதல் நடத்திய காவல் துறையினரின் தவறுக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று அஜித்குமாரின் மரணத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். அஜித்குமாரின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும் அன்னாரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறது.

மேலும் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல் துறைக்கும் இந்துமக்கள் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்

திருப்புவனம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ரூ. 1 இலட்சம் நிதியுதவி

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கா. பொற்கொடி ஐஏஎஸ் பதவி ஏற்பு

மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மகளிர் கல்லூரி மாணவிகள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக இரண்டு இளம் சிறார்கள் கைது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியரின் போலி கையெழுத்திட்டு பண மோசடி

March 6, 2025 36 Views
காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடவு
குளச்சலில் இருந்து எர்ணாகுளம் வழியாக முனம்பத்திற்கு பேருந்து இயக்க வேண்டும்
ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்
கிராம அறிவு மையக்கட்டடம் கட்டும் புதிய திட்டப்பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?