களியக்காவிளை, பிப். 16 –
களியக்காவிளை பி.பி.எம் சந்திப்பில் இருந்து கைதக்குழிக்கு பிரிந்து செல்லும் ஒற்றையடி பாதை உள்ளது. இந்த பாதை வழியாக நடந்து சென்ற வாலிபர் சம்பவ தினம் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இரவு நேரமானதினால் யாரும் கவனிக்கவில்லை. இதில் பலத்த காயம் அடைந்த சுமார் 40 வயது உடைய வாலிபர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஐந்து நாட்கள் கழித்து நேற்று சடலத்தை பார்த்த அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



