By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்ல தொடரும் தடை நீடிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்ல தொடரும் தடை நீடிப்பு
கனஂனியாகுமரி

கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்ல தொடரும் தடை நீடிப்பு

Last updated: May 10, 2024 11:46 am
May 10, 2024 85 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 10

குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் நீடித்து வருவதால் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து வருகிறது.
தென் இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுவதால் கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்லவேண்டாம் என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் கடந்த 4-ந் தேதி குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை கடல் சீற்றம் காரணமாக நீடித்தே வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து வருகிறது.

இந்த தடையால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் இறங்கி குளிப்பது வழக்கம். மேலும் கடற்கரையில் நின்று சூரியன் உதயம் பார்ப்பது உண்டு.

ஆனால் தற்போது அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் கடலுக்குள் இறங்கிடாத வகையில் அங்கு கயிறு கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுற்றுலா போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் கடலில் இறங்கச் செல்லும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகிறார்கள். அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று சுற்றுலா போலீசார் எச்சரிக்கை விடுத்த வண்ணமாக உள்ளனர்.

இதற்கிடையில் கன்னியாகுமரியில் இன்று காலை கடல் நீர்மட்டம் “திடீர்” என்று தாழ்வானது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்க கடல் பகுதியில் நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்றமாக காணப்பட்டன.

இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

எனவே பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இங்கும் ராட்சதஅலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

இருப்பினும் குறைந்த அளவு வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மேலும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு பயணிகள் படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

You Might Also Like

அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

நித்திரவிளையில் வாலிபரை வெட்டிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த குழித்துறை நகராட்சி தலைவர்

2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 26, 2024 45 Views
புதிய செவிலியர் கல்லூரிக்கு அரசு அங்கீகாரம்
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்
முதல்வர் பிறந்த தின நிதிநிலை அறிக்கை
ரேஷன் கடை பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?