சிவகங்கை, ஆக. 20 –
சிவகங்கை மாவட்டம் அரசனி முத்துப்பட்டியில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மற்றும் ஐஆர்சிடிஎஸ் நிறுவனம், சாக்கோட்டை காய்கறிகள் உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனி ஆகியவை இணைந்து நடத்திய சிறுதானிய மதிப்புகூட்டு யூனிட் புதிதாக திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன உரிமையாளர் ஜீவானந்தம் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனலெட்சுமி, நபார்டு வங்கி அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர் மதுரைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்னாத சுந்தரம் , இந்தியன் வங்கி வானியன்குடி கிளை மேலாளர் அஜய்குமார்ஷா உள்ளிட்ட பல்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினர்.
முன்னதாக சிவகங்கை மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்திகளை மேற்கொள்ள பல்வேறு இடங்களில் சாதகமான மண் வளம் இருப்பதாகவும், சிறுதானியங்களான சாமை, தினை, வரகு, கேப்பை, மக்காச்சோளம், குதிரைவாளி, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியப் பயிர்களை ஒக்கூர், கீழப்பூங்குடி, திருக்கோட்டியூர், இளையான்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுதானியப் பயிர்கள் விளைவிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.
இதனையடுத்துப் பேசிய மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் இந்தியன் வங்கி மேலாளர் ஆகியோர் பேசும்போது விவசாயம் சார்ந்த அதிலும் குறிப்பாக சிறுதானியப் பயிர் உற்பத்திக்கான வங்கிக் கடனுதவி அதிகளவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இயற்கை விவசாயிகள் மாவட்ட அமைப்பாள ஊராட்சி எழுத்தர்கள் ஞானப்பிரகாசம், வீரவலசை மூர்த்தி, இயற்கை விவசாயி கிளைட்டன், உதயம் பிரிண்டர்ஸ் உதயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் கணேஷ், விவசாயிகள் பெரியசாமி, அகஸ்டின், ஐஆர்சிடிஎஸ் ஊழியர்கள், விஎஃசிஎல் பி கணக்காளர் இராஜேஷ்வரி, ராகவி, ஜெனீஃபா, போதும்பொண்ணு, கேஜிஎஃபிசிஎல் பிரபாவதி , பாலகிருஷ்ணன், நான்ஸி மார்ட்டின், ரோஸ்லின் ரீட்டா, விமலா, பாரதி, குமாரி, ஓட்டுநர் ரஞ்சித், முகேஷ் கண்ணன், ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு சிறுதானிய மதிப்பு கூட்டு புதிய அலகினை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.



