தென்தாமரைகுளம், ஜூலை 2 –
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கிள்ளியூர் பஞ்சாயத்து உறுப்பினர்கள் இணைந்து நடத்திய இயற்கை மருத்துவம் பற்றிய கருத்தரங்கம் புனித அந்தோணியார் சமூக நலக்கூடத்தில் வைத்து ஆரம்பமானது. அந்தக் கூட்டத்திற்கு பெருமாங்குழி, கருங்கல் மற்றும் துண்டத்துவிளை மக்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
துவக்கப் பாடலுடன் கூட்டமானது ஆரம்பமானது. அக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை வழக்கறிஞர் அருள்தாஸ் வரவேற்று பேசினார். குழித்துறை இயற்கை முழுநல வாழ்வு மையத்தில் பணிபுரியும் மருவத்துவர் ஏஞ்சலின் ஆஷா தலைமைத் தாங்கி இயற்கை உணவு, உடல்நலம், தியானம் குறித்து மருத்துவ உரையாற்றினார். கிள்ளியூர் ஆயுர்வேத தலைமை மருத்துவர் வின்சி கருத்துரை வழங்கினார். இதனை சமூக பணி துறை மாணவர் ஆரோக்கியசாமி ஏற்பாடு செய்திருந்தார்.



