By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டும் பணிதல பொறுப்பாளர்களை மாற்றக் கோரியும் பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டும் பணிதல பொறுப்பாளர்களை மாற்றக் கோரியும் பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்
திண்டுக்கல்

ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டும் பணிதல பொறுப்பாளர்களை மாற்றக் கோரியும் பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்

Last updated: July 1, 2025 5:23 pm
July 1, 2025 4 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜூலை 1 –

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர் கிராம ஊராட்சியில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுத்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்காக சுமார் 4000-த்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை பெற்றுள்ளனர்.

இதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆயிரம் பேர் 100 நாள் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 100 நாள் வேலையான குளம் தூர்வாருதல், வரத்து வாய்க்கால் வேலை செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்பட்டு தற்போது தோட்டங்களில் 100 நாள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆத்தூர் ஊராட்சியில் மக்கள் நல பணியாளரான காளீஸ்வரி என்பவர் மட்டும் உள்ளார். ஆனால் பணிதல பொறுப்பாளர்கள் என கூறி 4 பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து 100 நாள் வேலைக்கு வராத ஆட்களின் அட்டையைப் பயன்படுத்தி அவர்கள் வேலை செய்வதாக பதிவு செய்து அவர்களின் சம்பளங்களை அவர்களது வங்கி கணக்கில் அனுப்பி அதில் பாதி தொகையை பணிதல பொறுப்பாளர்கள் பெற்றுக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது.

இது போன்று ஆத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலையில் தினமும் வேலைக்கு வராத 150க்கும் மேற்பட்டவர்களை பதிவு செய்து மெகா முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஆத்தூர் ஊராட்சி, அக்ரகார தெரு, புத்தூர் கோவில் தெரு, பத்திர ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. 100 நாள் வேலையில் ஆத்தூர் ஊராட்சியில் மிகப்பெரிய முறையீடு ஊழல் நடந்து உள்ளதாக கூறி அலுவலகத்தில் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

அவர்களுடன் ஆத்தூர் ஊராட்சி மன்ற செயலர் மணவாளன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் போது அலுவலகத்தில் பணிதல பொறுப்பாளராக உள்ள 4 பெண்களை மாற்ற வேண்டும். மக்கள் நலப் பணியாளர் தலைமையில்தான் 100 வேலை நடைபெற வேண்டும். எங்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You Might Also Like

அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி

கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்

திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் பாண்டியாஸ் ஹாக்கி கிளப் சார்பாக 2ம் ஆண்டு ஆண்கள் ஐவர் ஒருநாள் ஹாக்கி போட்டி

நிலக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன

திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக தலைமைச் செயற்குழு கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்வேலூர்

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில்

December 3, 2024 42 Views
மகளிர் சுயஉதவி குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு ஆட்டோ வாகனங்கள்
மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை சிறப்பு முகாம்
தஞ்சாவூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
மணற்கேணி செயலி பதிவிறக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?