விருதுநகர், செப்டம்பர் 15 –
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய 2024 – 2025 ஆம் ஆண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாநில பொதுச்செயலாளர் முருகேசன் அவர்கள் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட செயலாளர் வாசு, காரியாபட்டி நகர துணை தலைவர் பாலமுருகன், நரிக்குடி ஒன்றிய செயலாளர் கணேசன், சித்தனேந்தல் கிளைச்செயலாளர் பழனிச்சாமி, பேய்குளம் மகளிர் அணி தலைவி மாரீஸ்வரி, குரண்டி கிளை தலைவர் முத்துமாரி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



